Sunday, June 25, 2006

விச்சித்திர பிறவி

விரும்பாத வேதனை வந்தால்
விரும்ப கூடியவர்கள் நினைவில் வரும்.
வலியால் துடிக்கும் போது
வழிவகுக்கும் துணையை தேடி.

வினோதமானவனே, உனக்கோ...
வந்தது வந்தது வேதனை வந்தது
வேதனையோடு கூடிய வலியும் வந்தது
வலியிலும் ஞானம் வந்தது
வெற்றி பெற்றது போல் உயரம் தெரிந்தது
விதிவிளக்கு போல் ஒளி தெரிந்தது
வெற்றிலைக்காட்டையும் இரசிக்க தோன்றியது
வெற்று மனலையும் விரும்ப செய்தது
வெறித்த கண்ணால் செதுக்க முடிந்தது
வற்றாத ஊற்றாக கற்பனை பிறந்தது
வர்ணித்தபடியே வேதனையும் குறைந்தது.

தன்னை மறக்க எழுதும் கவிஞனுக்கு
தன்னை மறந்து கவிதை பிறந்தது.

No comments:

Blog Widget by LinkWithin

என்னைப் பற்றி